ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் சிறைபிடிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை ஒரு விசைப்படகுடன் இலங்கை கடற்படை சிறை பிடித்த சம்பவம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் படகுகளை எல்லை தாண்டியதாக கூறி, மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடிப்பது தொடர் கதையாகி வருகிறது. இந்தநிலையில், ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இந்த படகுகளில் பெரும்பாலான படகுகள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தன. அப்போது, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஒரு விசைப்படகுடன் 12 மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி சிறை பிடித்துச் சென்றனர். 

Night
Day