மே 31-க்குள் பாடப்புத்தகங்களை பள்ளிகளுக்கு அனுப்பவேண்டும் : பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வரும் 31 ஆம் தேதிக்குள் நோட்டு புத்தகங்கள் மற்றும் பாடப்புத்தகங்களை பள்ளிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

பள்ளி திறக்கும் நாள் அன்று மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்களை வழங்க வேண்டும் என அறிக்கையில் உத்தரவிடப்பட்டுள்ளது. மழை மற்றும் மின்கசிவால் பாதிக்கப்படாத வண்ணம் பாடப்புத்தகங்களை சேமித்து வைக்க வேண்டும் என்றும், மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் பாட புத்தகங்களை வழங்கியவுடன் எமிஸ் தலத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

Night
Day