முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி - நாளை தீர்ப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பெண் எஸ்பி.க்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டு தொடர்பாக விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கை வேறு நீதிமன்றத்திற்க்கு மாற்றக்கோரி முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிறை தண்டனையை எதிர்த்து ராஜேஷ் தாஸ் விழுப்புரம் அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டு வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கில் விழுப்புரம் நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Night
Day