மதுரை : வெளிநாடு வாழ் இந்தியரின் நிலத்தை ஆக்கிரமித்த உள்ளூர் வியாபாரி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை அருகே வெளிநாடு வாழ் இந்தியரின் 4 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து பயன்படுத்தி வந்தவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

மதுரை ஆத்திகுளத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் என்பவர் கடந்த 2005ம் ஆண்டு முதல் மனைவி ரத்தினமாலா மற்றும் மகள் ஷாலினி ஆண்ட்ருஸ் உடன் லண்டனில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு அவர் இறந்து போன நிலையில் அவருக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலத்தை நிலையூர் கைத்தறி நகர் இரும்புகடையை சேர்ந்த குமரேசன் என்பவர் போலி ஆவணங்கள் தயாரித்து ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் ராஜ்குமாரின் மனைவி கொடுத்த புகாரின் பேரில் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த மத்திய குற்றத்துறை போலீசார் குமரேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Night
Day