மதுரை - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சாலையைக் கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் சிறுமி உட்பட ஐந்து பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்த கனகவேல் என்பவர் தளவாய்புரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் பூமிதி திருவிழாவில் பங்கேற்க குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு இன்று காலை தளவாய்புரத்திலிருந்து மதுரை நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார். திருமங்கலம் சிவரக்கோட்டை நான்கு வழிச்சாலை அருகே வந்தபோது நிலையூரை சேர்ந்த பழ வியாபாரியான பாண்டி என்பவர் இருசக்கர வாகனத்தில், திடீரென சாலையை கடக்க முயன்றுள்ளார். இதனால் குறுக்கே வந்த வாகனம் மீது மோதாமல் இருக்க, காரை கட்டுப்படுத்த முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார், இருசக்கர வாகனம் மீது மோதியதுடன், சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவரிலும் மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த சிறுமி உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற பாண்டியும் இந்த விபத்தில் பலியானார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், விபத்து குறித்து கள்ளிக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Night
Day