மதுரை மீனாட்சி அம்மன் செங்கோல் விவகாரத்தில் தனி நீதிபதியின் உத்தரவிற்கு தடை விதிக்க முடியாது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை மீனாட்சி அம்மன் செங்கோல் விவகாரத்தில் தனிநீதிபதியின் உத்தரவிற்கு தடை விதிக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மீனாட்சி அம்மன் கோவிலில் கணவனை இழந்தோருக்கு செங்கோலை வழங்க தடை விதிக்க முடியாது என்ற தனிநீதிபதியின் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என உத்தரவிட்டு, வழக்கை ஜூன் மாதம் ஒத்திவைத்தனர். மேலும் ஆகம விதிகள் விவகாரத்தில் ஒரே நாளில் உத்தரவு பிறப்பிக்க நீதிபதிகள் ஒன்றும் ஆகம விதி நிபுணர்கள் இல்லை எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். 

Night
Day