நீர்நிலைகளில் குளிக்கவோ, மீன் பிடிக்கவோ செல்ல வேண்டாம் : பொதுமக்களுக்கு கோவை ஆட்சியர் எச்சரிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீர்நிலைகளில் குளிக்கவோ, மீன் பிடிக்கவோ செல்ல வேண்டாம் என பொதுமக்களுக்கு கோவை ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கோவையில் முண்டந்துறை தடுப்பணையில் குளிக்க சென்ற பள்ளி மாணவர்கள் 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதேபோன்று ஆணைமலை அருகே குளிக்க சென்ற மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள அறிக்கையில், வெயிலின் தாக்கம் காரணமாக நீர்நிலைகளில் பொதுமக்கள் , மாணவர்கள் குளிக்க செல்லும்போது நீர்சுழல், சேறுகளில் சிக்க வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நீர்நிலைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என ஆட்சியரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

varient
Night
Day