நடிகை கவுதமி சொத்தை அபகரிக்க முயன்ற அழகப்பன் உள்பட 19 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகை கவுதமி சொத்து அபகரிப்பு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிறையில் இருந்த 19 பேர், குண்டர் தடுப்புச் சட்டத்தில் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், குற்றங்களை தடுக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக, 19 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்குமாறு காவல் ஆணையர் உத்தரவிட்டார். திருட்டு, சங்கிலி பறிப்பு குற்றங்களில் 22 பேர், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனை செய்த 22 பேர், சைபர் குற்றவாளிகள் 2 பேர், பாலியல் தொழில் நடத்திய இருவர் உள்பட 122 பேர் சிறை வைக்கப்பட்டனர். நடிகை கௌதமி சொத்தை அபகரிக்க போலியான ஆவணம் தயாரித்த அழகப்பனும் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளார். 

Night
Day