தென்மேற்கு பருவமழை தீவிரம் : முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழக பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் கர்ப்பிணிகளை பிரசவ தேதிக்கு முன்னதாகவே மருத்துவமனையில் அனுமதிக்குமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதிக ஆபத்து, பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளை முன்கூட்டியே கண்டறிந்து சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் நிவாரண முகாம்களில் சுகாதாரமான உணவு, குடிநீர் மற்றும் சுகாதார வசதியை உறுதி செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதுமான பணியாளர்கள் 24 நேரமும் பணிபுரிவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. 

Night
Day