திருவள்ளூர் : தாமரைப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி நீக்கம் - மாவட்ட ஆட்சியர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவள்ளூரில் அரசுக்கு நிதியிழப்பு ஏற்படுத்திய 2 பெண் ஊராட்சி மன்ற தலைவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

தாமரைப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக கீதா பணியாற்றி வந்தார். இவரது கணவர் ஊராட்சி மன்ற பணிகளில் தலையிட்டு இடையூறுகள் செய்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் முறையாக ஊராட்சி மன்ற கூட்டங்களை நடத்தாமல் தீர்மானம் இயற்றியது, ஊராட்சி கணக்கிற்கு வரவினமாக்க வேண்டிய தொகையை கால தாமதாக செலுத்தியது என அடுக்கடுக்காக புகார்கள் எழுந்தன. இதன்பேரில் தாமரைப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கீதாவை பதவிநீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் உத்தரவிட்டுள்ளார். இதேபோல், அரசுக்கு 19 லட்சத்து 42 ஆயிரத்து 17 ரூபாய் நிதியிழப்பு செய்த வெங்கத்தூர் ஊராட்சி மன்ற பெண் தலைவர் சுனிதா பாலயோகியும் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

varient
Night
Day