தமிழ்நாட்டிற்கு இன்று ஆரஞ்சு அலர்ட்

எழுத்தின் அளவு: அ+ அ-

அரபிக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அரபிக்கடல் மற்றும் இலட்சத்தீவு பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இவை, அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய கூடும் எனவும் கணித்துள்ளது. மேலும், வரும் 24ம் தேதி வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், தமிழகத்திற்கு அடுத்த 7 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று முதல் 24ம் தேதி வரை 7 முதல் 11 சென்டி மீட்டர் அளவில் மழைக்கு வாய்ப்புள்ளதால் தமிழகத்திற்கு இந்த எச்சரிக்கையானது விடுக்கப்பட்டுள்ளது.

Night
Day