தமிழகத்தில் புதுப்பிக்கப்பட்ட 8 ரயில் நிலையங்களை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 508 ரயில் நிலையங்கள் 24 ஆயிரத்து 470 கோடி ரூபாயில் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்றன. இந்நிலையில், நாடு முழுவதும் பணிகள் நிறைவடைந்த 103 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி  காணொலி வாயிலாக இன்று திறந்து வைத்தார்.

தெற்கு ரயில்வேயில் சென்னை பரங்கிமலை, சிதம்பரம், மன்னார்குடி, ஸ்ரீரங்கம், விருத்தாசலம், திருவண்ணாமலை, போளூர், கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி, ஆந்திர மாநிலம் சூலுார்பேட்டை உட்பட 13 ரயில் நிலையங்கள் திறக்கப்பட்டன.

புதிதாக மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையங்களில், லிப்ட், நடை மேம்பாலம், கூடுதல் நடை மேடை, பயணியர் காத்திருப்பு அறைகள், நுழைவாயில்கள் சீரமைப்பு, எஸ்கலேட்டர்கள், மல்டி லெவல் பார்க்கிங், சிசிடிவி கேமரா உள்ளிட்ட வசதிகள் இடம் பெற்றுள்ளன.

Night
Day