தமிழகம்
நீட் தேர்வு முடிவுகள் - டாப் 100 ரேங்கில் 6 தமிழர்கள் இடம்பிடிப்பு
இளநிலை நீட் தேர்வு முடிவுகளின் டாப் 100 ரேங்கிங்கில் தமிழகத்தை சேர்ந்த 6 பேர...
சென்னை ஜாஃபர்கான்பேட்டையில் கூவம் ஆற்றில் மூழ்கி 14 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். ஜாஃபர்கான்பேட்டையை சேர்ந்த விஜயகுமார் - ஜோதி தம்பதியின் மகன் தனுஷ் 8ம் வகுப்பு படித்து வந்தான். ரம்ஜான் விடுமுறையில் நண்பர்களுடன் விளையாடியபோது, சிறுவர்கள் அடையாறு கூவம் ஆற்றில் இறங்கியுள்ளனர். அப்போது தனுஷ் நீச்சல் தெரியாமல் ஆற்றில் மூழ்கிய நிலையில், அச்சத்தில் மற்ற சிறுவர்கள் வீட்டிற்கு ஓடியுள்ளனர். தனுஷ் நீண்ட நேரமாக வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த பெற்றோர், அவரது நண்பர்களிடம் கேட்டபோது நிகழ்ந்த சம்பவத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற போலீசார் சிறுவனின் சடலத்தை மீட்டனர்.
இளநிலை நீட் தேர்வு முடிவுகளின் டாப் 100 ரேங்கிங்கில் தமிழகத்தை சேர்ந்த 6 பேர...
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ...