கடலூர்: வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு - வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பார்வதிபுரம் கிராம மக்கள் 2வது நாளாக வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வடலூர் வள்ளலார் பெருவெளியில் பன்னாட்டு மையம் அமைக்க பார்வதிபுரம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனிடையே கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 2வது நாளாகவும் அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவித்து வரும் மக்கள், கட்டுமான பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

Night
Day