நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
 
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை மற்றும் நாளை மறுதினம் நீலகிரிக்கு ரெட் அலர்ட்  விடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று வரும் 16  மற்றும் 17ம் தேதிகளில் நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் விடுத்துள்ளது. கோவை, தேனி, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 
 

Night
Day