சென்னை : மனைவியுடன் ஜனநாயக கடமையாற்றினார் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழாவான நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து குடிமக்களும் தவறாமல் வாக்கினை செலுத்த வேண்டும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வேண்டுகோள் விடுத்தார்.

சென்னை கிண்டி-வேளச்சேரி சாலையில் உள்ள அட்வெண்ட் கிறிஸ்தவ நடுநிலைப்பள்ளியில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தனது மனைவியுடன் சென்று ஜனநாயக கடமையாற்றினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சியடைவதாக கூறினார். அனைத்து குடிமக்கள், முதல்முறை வாக்காளர்கள் என அனைவரும் இந்த திருவிழாவில் பங்கேற்று வாக்கினை பதிவு செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். தென்சென்னை தொகுதியில் தனது வாக்கை பதிவிடுவதற்காக பீகாரிலிருந்து தனது வாக்கை ஆளுநர். ஆர்.என்.ரவி மாற்றியது குறிப்பிடத்தக்கது. 

Night
Day