சென்னை : தாம்பரம் - கடற்கரை இடையே இரவு 11.40 மணி, இரவு 11.59 மின்சார ரயில்கள் ரத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மின் பராமரிப்பு பணி காரணமாக சென்னை தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு இரவு 11.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் இன்று முதல் வரும் 16-ம் தேதி வரையிலும், 18-ந்தேதி முதல் 23-ம் தேதி வரையிலும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்‍குறிப்பில், சென்னை, சென்னை எழும்பூர்-விழுப்புரம் இடையே தாம்பரம் யார்டு பகுதியில் மின் பராமரிப்பு பணி நடைபெறுவதாகவும் எனவே இன்று முதல் வருகிற 16-ந்தேதி வரையிலும், 18-ந்தேதி முதல் 23-ந்தேதி வரையிலும் கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு நள்ளிரவு 11.59 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது. மேலும் தாம்பரம்-சென்னை கடற்கரைக்கு இரவு 11.35 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் வருகிற 17-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day