சென்னை பாடி மேம்பாலத்தில் வழுக்கி விழும் வாகன ஓட்டிகள்

எழுத்தின் அளவு: அ+ அ-

கனமழை காரணமாக சென்னையை அடுத்த பாடி மேம்பாலத்தில் தண்ணீர் தேங்கி நின்றது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மேம்பாலம் ஒன்றிலேயே தண்ணீர் தேங்கி நின்ற அவலமும் இந்த விளம்பர ஆட்சியில் நடக்கிறது. இதனிடையே பாடி மேம்பாலத்தில் சென்ற இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து வழுக்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், பாடி பகுதியில் குண்டும் குழியுமாக உள்ள சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால் பள்ளங்களில் சிக்கி வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். 

varient
Night
Day