சென்னை அருகே நிலநடுக்கம் - மக்கள் பீதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை அருகே நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

ஆந்திர மாநிலம் திருப்பதியில் நேற்று இரவு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவில் 3.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் திருப்பதியில் இருந்து கிழக்கு, வடகிழக்கு திசையில் 58 கிலோ மீட்டர் தொலைவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் பதிவாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நில அதிர்வு தமிழ்நாட்டில் சென்னை புறநகர் பகுதி வரை உணரப்பட்டது. குறிப்பாக, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டதாக மக்கள் தெரிவித்தனர். திடீரென ஏற்பட்ட நில அதிர்வால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இருப்பினும் நில அதிர்வால் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

Night
Day