சிபிஐ தாக்கல் செய்த குற்றபத்திரிக்கையில் குறை - மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 மடப்புரம் கோயில் காவலாளி அஜீத்குமார் மரண வழக்கின் குற்றப்பத்திரிகையில் குறைகள் உள்ளதாகக்கூறி மதுரை மாவட்ட நீதிமன்றம் திருப்பி அனுப்பியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி அஜீத்குமார் கடந்த ஜூன் மாதம்  தனிப்படை காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் கண்டனத்துக்குப்பின் சிபிஐக்கு மாற்றப்பட்டது. இதனையடு கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்த சிபிஐ, கடந்த மாதம் மதுரை மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் முதற்கட்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

குற்றப்பத்திரிகையை படித்த நீதிபதி செல்வபாண்டி, குற்றப்பத்திரிகையில் குறைகள் உள்ளதால் அதனை சரி செய்து உரிய ஆவணங்களுடன் மீண்டும் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

Night
Day