கோவை: 'ஆயிரம் ரூபாய் எங்கே...' - ஆ.ராசாவை முற்றுகையிட்ட பெண்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரி திமுக வேட்பாளர் ஆ. ராசாவை முற்றுகையிட்ட பெண்கள், அவரிடம் மகளிர் உரிமைத் தொகை வரவில்லை என கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. அன்னூர் அருகே பிரசாரம் செய்த ஆ.ராசா, கெம்பநாயக்கன்பாளையத்தில் வாக்கு சேகரித்தார். அப்போது, அங்கு கூடியிருந்த பெண்கள், தங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வரவில்லை என கூறி அவரை முற்றுகையிட்டு கேள்வி எழுப்பினர். சுதாரித்துக்கொண்ட ஆ.ராசா, தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என சமாளித்துவிடடு அங்கிருந்து நழுவிச்சென்றார்.

Night
Day