கோயம்பேடு, கிண்டி உள்ளிட்ட இடங்களில் கடும் பனிமூட்டம் : முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்ற வாகன ஓட்டிகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை புறநகர் பகுதிகளில் அதிகாலை முதலே பனிமூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகினர். கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான பனிமூட்டம் இருந்த நிலையில், இன்று கடும் பனிமூட்டம் நிலவியது. கோயம்பேடு, கிண்டி, பல்லாவரம், தாம்பரம், எழும்பூர் உள்ளிட்ட இடங்களில் அதிகாலை முதலே பனிமூட்டம் அதிகரித்து காணப்பட்டது. சாலைகள் முழுவதும் புகை சூழ்ந்ததுபோல் காட்சியளித்ததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி வாகனங்களை ஓட்டி சென்றனர்.

Night
Day