கோத்தகிரியில் நள்ளிரவில் ஊருக்‍குள் வந்த கரடி, கருஞ்சிறுத்தை - பொதுமக்‍கள் அச்சம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பெரியார் நகர் பகுதியில் கரடி மற்றும் கருஞ்சிறுத்தை அடுத்தடுத்து உலா வந்த சிசிடிவி காட்சிகள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கோத்தகிரி சுற்றுவட்டார வனப்பகுதிகள் தேயிலை தோட்டங்களை கொண்டதாக உள்ளன. இரவு நேரங்களில் வீடுகளில் வளர்க்கும் செல்லப் பிராணிகளை வேட்டையாட சிறுத்தைகள் நடமாடி வருவது சமீப நாட்களாக அதிகரித்துள்ளது. இதனிடையே, கோத்தகிரி அருகே உள்ள பெரியார் நகர் பகுதியில் வழக்கம்போல் நேற்று இரவு அரை மணி நேர இடைவெளியில் முதலில் கரடியும், பின்னர் கருஞ்சிறுத்தை ஒன்றும் உலா வந்த சிசிடிவி காட்சிகள் பதிவாகி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

varient
Night
Day