குடிநீரில் ஈ-கோலை பாக்டீரியா கலந்திருந்ததால் 5 பேர் மரணம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசி மாவட்டம், சுந்தரபாண்டியபுரம் முதியோர் இல்லத்தில் 5 முதியவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் குடிநீரில் ஈ-கோலை பாக்டீரியா கலந்திருந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது.

சுந்தரபாண்டியபுரம் பகுதியில் செயல்பட்டு வந்த அன்னை முதியோர் இல்லத்தில் 5 முதியவர்கள் உயிரிழந்த நிலையில், 19 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பாக காப்பகத்தின் உரிமையாளர் ராஜேந்திரனை சாம்பவர் வடகரை போலீசார் கைது செய்த நிலையில், முதியவர்கள் சாப்பிட்ட உணவு மாதிரிகள் மற்றும் குடிநீர் மாதிரிகளை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சேகரித்து ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், முதியவர்கள் பருகிய குடிநீரில் ஈ-கோலை பாக்டீரியா கலந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

Night
Day