தமிழகம்
"குரூப் 4 வினாத்தாள் கசியவில்லை" - டிஎன்பிஎஸ்சி விளக்கம்
தமிழகம் முழுவதும் நாளை நடைபெறவுள்ள டிஎன்பிஎஸ்சி குரூப்4 தேர்வை 13 லட்சத்தி...
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்ட செயல்முறை கிடங்கில் ரேஷன் அரிசி மூட்டைகள் வண்டுகள் பிடித்து கிடக்கும் வீடியோ வெளியாகி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சங்கராபுரத்தில் உள்ள வட்ட செயல்முறை கிடங்கில் இருந்து 100க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளுக்கும், அரசு பள்ளிகளுக்கும் அரிசிகள் அனுப்பப்படுகின்றன. இந்நிலையில் கிடங்கில் வைக்கப்பட்டுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள் கருப்பு வண்டுகள் பிடித்தும், ஒட்டடை படிந்து மக்கி கிடக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. இதில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்களின் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் நாளை நடைபெறவுள்ள டிஎன்பிஎஸ்சி குரூப்4 தேர்வை 13 லட்சத்தி...
விமான விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கையை ஏற்பதாக ஏர்இந்தியா அற...