தமிழகம்
2026ல் திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்' - புரட்சித்தாய் சின்னம்மா செய்தியாளர் சந்திப்பு...
திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துகொண்டே ?...
கன்னியாகுமரி மாவட்டம் இரவின்புதூர்கடை அருகே வழக்கறிஞரை தாக்கியவர்கள் மீது வழக்கு பதியக்கோரி நள்ளிரவில் வழக்கறிஞர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். இரவின்புதூர் கடை பகுதி சீனு, தனது நண்பரும் வழக்கறிஞருமான ஜெப்பினோவுடன் ஈச்சன்விளையில் உள்ள தனது நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு விளையாடி கொண்டிருந்த இளைஞர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதையடுத்து தான் தாக்கப்பட்டதாக ஜெப்பினோ திருவட்டார் போலீசில் புகாரளித்தார். தொடர்ந்து வழக்கறிஞரை தாக்கியவர்கள் மீது வழக்கு பதியக்கோரி 30-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நள்ளிரவில் திருவட்டார் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென போலீசார் கூறியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துகொண்டே ?...
காங்கிரஸ் ஆட்சியில் தான் நீட் தேர்வு சட்டமாக்கப்பட்டது என நிரூபித்தால் ர...