"தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு 2 டிகிரி செல்சியஸ் வரை வெயில் குறையும்"

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு 2 டிகிரி செல்சியஸ் வரை வெயில் குறைய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை மறுதினம் ஈரோடு, நீலகிரி, கோவை, திண்டுக்கல், நெல்லை. தேனி, விருதுநகர், தென்காசி ஆகிய 8 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் அதிகபட்ச வெப்பநிலை 36 அல்லது 37 டிகிரி செல்சியஸ் வரையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

varient
Night
Day