மும்பையில் வேட்டையன் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வேட்டையின் படப்பிடிப்பிற்காக மும்பை சென்று இருந்த நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில், அமிதாப் பச்சன், மஞ்சுவாரியர், ராணா, பகத் ஃபாசில், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு, இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இப்படம், வரும் அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக மும்பை சென்றிருந்த ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். மேலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடிக்கவுள்ளது மகிழ்ச்சியாக உள்ளதாக ரஜினிகாந்த் மகிழ்ச்சி தெரிவித்தார். 

Night
Day