உடைமைகளை மீட்டு தரக்கோரி ஜெயம் ரவி புகார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை ஈ.சி.ஆர். சாலையில் உள்ள ஆர்த்தி வீட்டில் இருந்து தனது உடைமைகளை மீட்டுத்தருமாறு நடிகர் ஜெயம் ரவி அடையாறு துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார். 

நடிகர் ஜெயம் ரவி, தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். கோர்ட்டில் விவாகரத்து வழக்கும் தொடர்ந்து இருக்கிறார். அதனைத்தொடர்ந்து, சில தினங்களுக்கு முன்பு, தன்னை வீட்டை விட்டு ஆர்த்தி வெளியேற்றிவிட்டதாக கூறி ஜெயம் ரவி போலீஸில் புகார் தெரிவித்ததாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், நடிகர் ஜெயம் ரவி அவரது மனைவி ஆர்த்தி மீது அடையாறு துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார்.

varient
Night
Day