வேங்கைவயல் விவகாரம் - காவலர் முரளிராஜா சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் விவகாரத்தில் காவலர் முரளிராஜா 2-வது முறையாக சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகினார். 

வேங்கைவயலில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மர்ம நபர்கள் மனித கழிவை கலந்தது தொடர்பாக, இதுவரை பல்வேறு விதமாக சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக வேங்கைவயலை சேர்ந்த காவலர் முரளிராஜாவை நேரில் ஆஜராகுமாறு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் காவலர் முரளிராஜா நேரில் ஆஜராகினார். மேலும் வேங்கைவயல் விவகாரம் 500 நாட்களை எட்டவுள்ள நிலையில், இது தொடர்பாக குற்றவாளிகளை சிபிசிஐடி போலீசார் நெருங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

varient
Night
Day