புதுக்கோட்டை : சிறுமிக்கு பாலியல் தொல்லை - முதியவருக்கு 25 ஆண்டுகள் சிறை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுக்கோட்டை அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 53 வயது முதியவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இலுப்பூர் அருகே உள்ள போலம்பட்டியில் கடந்த 2022ம் ஆண்டு 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 53 வயதுடைய சோலையப்பன் என்பவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்திருந்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயந்தி,  குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும் 30 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Night
Day