நெல்லை - காங்கிரஸ் பிரமுகர் வீட்டிலிருந்து லட்சக்கணக்கில் பணம் பறிமுதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 நெல்லை பாளையங்கோட்டை அருகே காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


மகாராஜ நகரை சேர்ந்த ரிச்சர்ட் என்பவர், பாளையங்கோட்டை வட்டார காங்கிரஸ் கட்சி துணைத்தலைவராகவும், மாவட்ட கல்குவாரி சங்க தலைவராகவும் உள்ளார். இந்நிலையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் ரிச்சர்ட் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் பல லட்ச ரூபாய் ரொக்கமும், அரசு முத்திரை சீல் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது அங்கு தேர்தல் பறக்கும் படையினரும் சென்று வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக ரொக்கம் வைக்கப்பட்டுள்ளதா என தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். 

Night
Day