நாகை: பெண்ணுக்கு ஆபாச படம் அனுப்பிய நபர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாகையில் பெண்ணுக்கு ஆபாச படம் அனுப்பியவரை 2 ஆண்டுகளுக்கு பிறகு தனிப்படை போலீசார் கைது செய்தனர். கடந்த 2022ம் ஆண்டு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பெண்ணுக்கு வாட்ஸ் ஆப் மூலமாக ஆபாச படங்களை அனுப்பியுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து அடையாளம் தெரியாத நபரை தேடி வந்தனர். இதனிடையே இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சைபர் க்ரைம் போலீசார் குற்றவாளியை அடையாளம் கண்டனர். பெண்ணுக்கு வாட்ஸ் ஆப் மூலம் ஆபாச படங்களை அனுப்பிய திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் பகுதியைச் சேர்ந்த வசந்தராஜனை தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Night
Day