நீதிபதி மீது காலணி வீச முயன்ற கருக்கா வினோத்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தனக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக கூறி ரவுடி கருக்கா வினோத், நீதிபதி மீது காலணியை வீச முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநர் மாளிகை முன்பு கடந்த 2023ஆம் ஆண்டில்  2 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி கருக்கா வினோத்துக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இந்நிலையில்,  மற்றொரு வழக்கில், சென்னை 6வது கூடுதல் நீதிமன்றத்தில் கருக்கா வினோத்தை போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது, ஆளுநர் மாளிகை வழக்கில் தனக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டதாக முழக்கமிட்டவாறு, நீதிபதி மீது காலணியை வீச முயன்றுள்ளார். அப்போது போலீசார் அவரை தடுத்து, கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.  

Night
Day