தென்காசி: கேரளாவிற்கு ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தல் - ஒருவர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 7 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். புளியரை வாகன சோதனை சாவடி வழியாக சென்று கொண்டிருந்த கேரள பதிவெண் கொண்ட ஒரு லாரியை மறித்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, லாரியில் மூட்டை முட்டையாக ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து 7 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர். 

Night
Day