திருவாரூர்: அரசு மருத்துவமனையை சூறையாடிய கஞ்சா ஆசாமி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவாரூர் அரசு மருத்துவமனைக்குள் புகுந்த கஞ்சா போதை ஆசாமி பொருட்களை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மன்னார்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று நள்ளிரவு உள்ளே புகுந்த வடிவேல் என்ற இளைஞர், தலைக்கேறிய கஞ்சா போதையில் அங்கிருந்தவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். அதோடு நாற்காலி, மேசை, ஜன்னல்களை உடைத்து ரகளையில் ஈடுபட்டதால், மருத்துவர்களும் செவிலியர்களும் அச்சமடைந்தனர். தகவலறிந்து சென்ற போலீசார் கஞ்சா போதையில் இருந்த நபரை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். 

Night
Day