ராமநாதபுரம்: நீச்சல் குளத்தில் ஆனந்த குளியலிட்ட ராமலெட்சுமி யானை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவில் யானை, நீச்சல் குளத்தில் ஆனந்த குளியலிட்டது. ராமநாதசுவாமி கோவிலில் உள்ள ராமலெட்சுமி யானைக்காக வடக்கு வாசலில் உள்ள நந்தவனத்தில் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நீச்சல் குளம் கட்டப்பட்டது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால், சூட்டினை தணிப்பதற்காக ராமலெட்சுமி யானை நீச்சல் குளத்தில் இறக்கிவிடப்பட்டது. சுமார் ஒரு மணி நேரமாக யானை உற்சாகத்துடன் ஆனந்த குளியலிட்டது.

Night
Day