கேரளா: சாலையோரம் நடந்து சென்றவர் மீது மோதிய கார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கேரளாவில் சாலையோரம் நடந்து சென்றவர் மீது கார் மோதி தூக்கி வீசப்படும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. மலப்புரம் மாவட்டம் எடப்பாள் பகுதியில் பாதசாரி ஒருவர் சாலையோரம் நடந்து சென்றுள்ளார். அப்போது பின்னால் வேகமாக வந்த கார் அந்த நபர் மீது மோதி தூக்கி வீசியது. இதில் படுகாயமடைந்த நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்தில் சிக்கியவர் குறித்தும், விபத்தை ஏற்படுத்திய நபர் குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day