க்ரைம்
இரட்டை கொலை - குற்றவாளியை நெருங்க முடியாமல் திணறும் போலீசார்
ஈரோடு மாவட்டம் விலாங்காட்டு வலசு இரட்டை கொலை சம்பவம் நடந்து 5 நாட்களாகியு?...
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் பேருந்தில் பயணம் செய்த முதியவரிடம் செல்போனை பறித்துச் சென்ற இளைஞரை பிடித்து பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். வேடசந்தூர் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் வேலை விசயமாக திண்டுக்கல் சென்றுவிட்டு வேடசந்தூருக்கு தனியார் பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது வேடசந்தூர் பேருந்து நிலையத்திற்குள் பேருந்து நுழைந்த போது, இளைஞர் ஒருவர் ராதாகிருஷ்ணன் சட்டை பையில் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார். இதனை கண்ட அங்கிருந்த மக்கள் அவரை விரட்டி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், அவர் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த குமார் என்பதும், அவர் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
ஈரோடு மாவட்டம் விலாங்காட்டு வலசு இரட்டை கொலை சம்பவம் நடந்து 5 நாட்களாகியு?...
யூ டியூபர் டி.டி.எப் வாசன் மீது இதுவரை பதிவு செய்யப்பட்ட வழக்கு விவரங்களை ?...