திண்டுக்கல்: சொத்து தகராறில் மாமனார், மாமியாருக்கு அரிவாள் வெட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சொத்து தகராறில் நள்ளிரவில் வீடு புகுந்து 4 பேரை வெட்டிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

அம்மைநாயக்கனூர் ராசு-பாண்டியம்மாள் தம்பதிக்கும் அவர்களின் 2-வது மருமகளுக்கும் இடையே அடிக்கடி சொத்து தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் மாமனார் ராசு குடும்பத்தினர், மருமகளின் தந்தை முருகேசன், தம்பி அருண்குமார் ஆகியோரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த முருகேசன், அருண்குமார் ஆகியோர் நள்ளிரவில் ராசுவின் வீட்டிற்குள் நுழைந்து, ராசு, பாண்டியம்மாள் உள்ளிட்ட 4 பேரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியுள்ளனர். அங்கிருந்தோர் 4 பேரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அம்மைநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிந்து தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.

Night
Day