தருமபுரி: மர்மமான முறையில் பெண் கொலையான சம்பவத்தில் 3 பேர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் மர்மமான முறையில் பெண் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஹோமியோபதி மருத்துவர், தம்பி உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். நாகமரை 4 சந்திப்பு சாலை பகுதியைசேர்ந்த குணசேகரன் மனைவி சுமதி வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி கொலைச்சம்பவம் தொடர்பாக  5 தனிப்படை போலீசார் கொலையாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் சுமதியின் தம்பி சீனிவாசனின் மனைவி இந்திரகுமாரி அவரது தம்பி அரவிந்த், நண்பர் சக்தி ஆகியோர் இணைந்து சுமதியை கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர்.

Night
Day