சென்னை: காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய குடிபோதை ஆசாமி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை ஓட்டேரியில் கோயில் திருவிழாவின்போது மதுபோதையில் காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய நபர் கைது செய்யப்பட்டார்.

ஓட்டேரியில் உள்ள ஆதி மொட்டையம்மன் கோவில் திருவிழாவின் போது, புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த சரத்குமார் என்பவரிடம், ஹரிகுமார் என்ற போதை ஆசாமி தகராறில் ஈடுபட்டு தாக்கியதாக கூறப்படுகிறது. தகவலின் பேரில் சென்ற ஓட்டேரி காவல் உதவி ஆய்வளர் உமாபதி உள்ளிட்ட போலீசார், போதையில் இருந்த ஹரிகுமாரை தடுத்துள்ளனர். அப்போது போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டி காவல் உதவி ஆய்வாளரை கீழே தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் உமாபதிக்கு லேசான காயம்  ஏற்பட்டது. இதையடுத்து ஓட்டேரி போலீசார் ஹரிக்குமார் மீது வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Night
Day