சென்னை ராயபுரத்தில் ரூ.18 லட்சம் மதிப்புள்ள 12 ஐபோன்கள் பறிமுதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆட்டோவில் உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச் சென்ற 18லட்ச ரூபாய் மதிப்புள்ள 12 ஐபோன்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்  பறிமுதல் செய்துள்ளனர். 
வடசென்னை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ராயபுரம் பகுதியில் நிலைக்குழு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மண்ணடி பகுதியில் இருந்து வந்த ஆட்டோவில் இருந்த அசன் என்பவரிடம்  18 லட்சம் மதிப்புள்ள 12 ஐபோன்கள் இருந்ததும் அதற்கான ஆவணங்கள் ஏதும் இல்லாமல் இருப்பதும் தெரிய வந்தது. உடனடியாக ஐபோன்களை பறிமுதல் செய்து அதிகாரிகள் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

Night
Day