செங்குன்றத்தில் ஏடிஎம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை செங்குன்றத்தில் ஏடிஎம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட போதை ஆசாமியின் கண்காணிப்பு கேமரா காட்சி வெளியாகியுள்ளது. செங்குன்றத்தில் தனியார் HDFC வங்கியின் ஏடிஎம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஏடிஎம்-க்கு மதுபோதையில் வந்த நபர் ஒருவர், ஏடிஎம்-யின் இயந்திரத்தை கல்லால் உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட அலெக்ஸாண்டர் என்பவரை கைது செய்து விசராணை நடத்தி வருகின்றனர். தற்போது, இந்த சம்பவத்தின் கண்காணிப்பு கேமரா காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Night
Day