சென்னையில் நள்ளிரவில் மழை - மக்கள் நிம்மதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தின்  பல்வேறு மாவட்டங்களில் நேற்று இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.

சென்னையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், நேற்று நள்ளிரவில் சென்னையில் பல பகுதிகளில் கனமழை பெய்தது. தேனாம்பேட்டை, வள்ளுவர் கோட்டம்,  கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, ராயப்பேட்டை, wall tax  சாலை, சென்ட்ரல், கிண்டி, அசோக் நகர் உள்ளிட்ட இடங்களில் கனமழை  பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த கனமழையால் சென்னை அண்ணா சாலையில் உள்ள ஜி பி சாலையில் மழை நீர் தேங்கியது. மேலும் குளிர்ச்சியான சூழல் நிலவுவதால், வெப்பத்தின் தாக்கத்திலிருந்து விடுபட்டு பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

Night
Day