சிவகங்கை: ரயிலில் ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.38.47 லட்சம் பறிமுதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரபிரதேச மாநிலம் பனாரசில் இருந்து ராமேஸ்வரத்துக்கு வந்த ரயிலில், உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட 38 லட்ச ரூபாய் ரொக்கப்பணத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மானாமதுரை ரயில் நிலையத்துக்கு வந்த விரைவு ரயிலில், போதைப் பொருள் நுண்ணறிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். சந்தேகத்துக்கிடமான வகையில் இருந்த இருவரிடம் சோதனை நடத்திபோது, அவர்கள் 38 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இருவரும் சென்னையில் உள்ள தனியார் சட்டக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருவதாக கூறிய நிலையில், இவ்வளவு பெரிய தொகை ஹவாலா பணமா அல்லது கஞ்சா கடத்தல் வியாபாரிகளுக்கு கொடுப்பதற்காக கொண்டுவரப்பட்ட பணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Night
Day