கேரளா : பாஜக நிர்வாகி கொலை வழக்கில் 15 பேருக்கு தூக்கு தண்டனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கேரளாவில் பாஜக நிர்வாகி கொலை வழக்கில் 15 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு பாஜக மாநில செயலாளர் ரஞ்சித் சீனிவாசன், அவரது குடும்பத்தினர் முன்னிலையில், தூக்கில் தொங்க விடப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், வழக்கு விசாரணை ஆலப்புழாவில் உள்ள மாவேலிக்கரா கிழமை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் 15 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தடை செய்யப்பட்ட பிஎப்ஐ அமைப்பைச் சேர்ந்த 15 பேருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். 

Night
Day