காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரூபி மனோகரனிடம் போலீசார் விசாரணை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் உயிரிழப்பு தொடர்பாக நாங்குநேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரனிடம் நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் பூச்சிக்காட்டில் உள்ள ஒரு கல்லூரியில் வைத்து போலீசார் நடத்தினர். அப்போது ஜெயக்குமாரிடம் வாங்கிய 78 லட்சம் ரூபாயை திருப்பி கொடுக்காதது ஏன்? என்றும், தேர்தலின் போது நாங்குநேரி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக தங்களுக்கு 65 லட்சம் கிடைத்தும் ஜெயக்குமாருக்கு ஏன் தேர்தல் செலவுக்கு பணம் வழங்கவில்லை என்றும் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. அப்போது, ஜெயக்குமாரின் மரணத்தில் இருந்து தான் இன்னும் மீளவில்லை என்று கூறி போலீசாரின் கேள்விகளுக்கு ரூபி மனோகரன் பதிலளிக்க மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

Night
Day