க்ரைம்
டி.ஜி.பி. பெயரில் முகநூல் கணக்கு தொடங்கி பணம் மோசடி..!
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
உத்தரபிரதேச மாநிலம் பரேலி நகரின் பராதாரி பகுதியில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் இரண்டு பெண்கள் உட்பட 8 பேருக்கு பரேலி நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. 2014 ஏப்ரலில் புஷ்பா தேவி என்பவர் வீட்டில் கொள்ளையடிக்க நுழைந்த கும்பல் அவரையும், அவரது மகன் யோகேஷ் மிஸ்ரா, மருமகள் பிரியா மிஸ்ரா ஆகியோரைக் கொலை செய்தது. இந்த சம்பவம் தொடர்பாக பஞ்சாபின் சாய்மர் கும்பலைச் சேர்ந்த வாஜித், யாசீன் என்கிற ஜீஷான், நஜிமா, ஹஷிமா, சமீர் என்கிற சஹாப் என்கிற நபீஸ், சுல்பாம் மற்றும் ஃபஹீம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் 8 பேருக்கும் மரண தண்டனையும், திருட்டு நகைகளை வாங்கிய ராஜு வர்மா என்பவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
உழைக்கும் வர்க்கம் உரிமைகளை வென்றெடுத்த உன்னதத்தைக் கொண்டாடி மகிழும் மே ...