உலகம்
பஹல்காம் தாக்குதல் - SCO மாநாட்டில் கண்டனம்
பயங்ரவாதம் உலக நாடுகளுக்கு பெரும் சவாலாக மாறி இருப்பதாக பிரதமர் மோடி குற?...
சவுதி அரேபியாவில் வெப்ப அலையால், ஜோர்டானை சேர்ந்த 14 யாத்ரீகர்கள் மற்றும் ஈரானை சேர்ந்த 5 பேர் என மொத்தம் 19 பேர் உயிரிழந்தனர். சவுதி அரேபியாவின் மெக்கா நகருக்கு உலகம் முழுவதும் இருந்து மக்கள் ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆண்டு, 18 லட்சம் யாத்ரீகர்கள் பல்வேறு நாடுகளில் இருந்து சவுதிக்கு பயணம் மேற்கொள்வார்கள் என அந்நாட்டுக்கான புள்ளியியல் அமைப்பு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. இதனிடையே சவுதி அரேபியா மெக்காவில் 118 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. சவுதியில் நிலவும் வெப்ப அலையால், ஜோர்டானை சேர்ந்த 14 யாத்ரீகர்கள் மற்றும் ஈரானை சேர்ந்த 5 பேர் என மொத்தம் 19 பேர் உயிரிழந்தனர். இதனை ஈரானின் செம்பிறை அமைப்பின் தலைவர் ஃபிர் ஹூசைன் உறுதிப்படுத்தி உள்ளார். மேலும் 17 பேரை காணவில்லை என்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
பயங்ரவாதம் உலக நாடுகளுக்கு பெரும் சவாலாக மாறி இருப்பதாக பிரதமர் மோடி குற?...
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராட்டம்தேவிபட்டினம் அருகே ஹைட்ரோ ?...